தெரிஞ்சிகிலாம் வாங்க

உலக தினங்கள்

காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.
உலக தினங்களின் பட்டியல்

பிப்ரவரி 14, காதலர் தினம்‌

பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்
மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்
மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்

ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்
செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்
நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்



...............................................................................................................................................................


3 ஜி செல்போன் கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து!


 3ஜி செல்போன் கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும்'' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தற்போது செல்போன்களின் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயன் படத்தக்கதாக உள்ளது. செல் போன்களின் தேவை

அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தொழில் நுட்பத்தின் தரம் உயர்ந்து வருகிறது. தொலைபேசி துறையில் 2ஜி (இரண்டாம் தலைமுறை) ஆக இருந்த செல்போன் தற்போது 3ஜி (மூன்றாம் தலைமுறை)க்கு வளர்ந்து விட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சியின் தரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சக்தி வாய்ந்த செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செல்போன் கோபுரங்கள் தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 40 ஆயிரம் செல் போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீதம் செல்போன் கோபுரங்கள் மூலம் 3ஜி' தரம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இவை பல நகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள சிக்னல்கள் 2ஜி'ஐ விட 2 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.

அவற்றில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் புற்றுநோய் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட நோய்களை உருவாக்க கூடியது என கருதப்படுகிறது. மூளை புற்றுநோய், தலைவலி, ஞாபகமறதி, புற்றுநோய்  கட்டி, தசை மற்றும் மூட்டு வலி, மன அழுத்தம், தூக்க மின்மை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

_3ஜி' செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் அதிக அளவில் தாக்கக் கூடியது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் புற்றுநோய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நோய்களால் பாதக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.

அவற்றின் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகளில் வெளிப்படும். இந்த தகவலை மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் கிரிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இவர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய் வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜி' செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் சில மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் இதன் விளைவை கட்டாயம் சந்தித்தே தீருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.


`3ஜி' செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல் பெல்ஜியம், பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு குழந்தைகள் செல்போன்களை உபயோகிப்பது குறைக்கப்பட்டுள்ளது.
 .........................................................................................................................................................

 டச் ஸ்க்ரீன் எப்படி வேலை செய்கிறது
 

AC /  ஏர் கண்டிஷன் /ப்ரிட்ஜ்   வேலை சேயும் விதம் 


       Four Stroke Engine How it Works

 

 காற்றாலை யில் மின்சாரம்  எப்படி உண்டாகிறது? 

                                           






    Ocean Energy - Tidal  Curren Turbine 









காய்கறி வாங்குவது எப்படி..?

விவசாயத்தில் ஊறி கடந்த நம் முன்னோருக்கு இது பசு மரத்து ஆணி போல் பதிந்திருக்கும்... நமக்கு அப்படியா ? விவசாயம் - விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான்..
எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும்.... வாங்குவது எப்படி..?
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்....
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
   Thanks BY  www.kalvisolai.info



No comments:

Post a Comment