ஐசான் வால் நட்சத்திரம் சூரியனில் சூன்யமான சோக செய்தி


நண்பர்களே..
நாம் ஆவலோடு எதிர்பார்த்த ஐசான் வால் நட்சத்திரம் காணாமல் போய்விட்டது. நமக்கான வேலை இன்னும் இருக்கிறது.பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அறிவியல் இயக்க செயல் வீரர்களுக்கு பாராட்டுக்கள்..
அன்புடன்

எஸ்.டி.பாலா


ஐசானே..ஐசானே...!
பத்தாயிரம் ஆண்டுகளாய் பறந்தாய்
ஒவ்வொரு கோள்களாய் கடந்தாய்
புதிய செய்தி சொல்வாய் என
பூமி எங்கும் உன் புகழ் பரப்பினோம்
சீறிப் பாய்ந்து சென்றாயே
சின்னஞ் சிரிய ஐசானே
சூரியனைக் கடப்பாய் என
கண் விழித்து காத்திருந்தோம்....
சூரியனை நெருங்கினாய்
சுக்கு நூறாய் ஆகிப் போனாய்..
சூரியனில் கரைந்தவனே - நீ
மறைந்த சூட்சுமமும் நாமறிவோம்.
வரலாற்றில் நீ இருப்பாய்
உன்னை உலகெங்கும் பரப்பிய
அறிவியல் இயக்கமும் இருக்கும்...
ஐசானே...ஐசானே....
உன்னால் மூண்டும் வர இயலாதோ...
அன்புடன்
எஸ்.டி.பாலா 



உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்று வட்டத்தை நெருங்கியதும் அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை. ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது. ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது. சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அனேகமாக அது சிதறுண்டு போயிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது. தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது. நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன். மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம்.

ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம். தப்பிப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது. ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

 

Nov 28th 11am…  ISON COMET  hitting  SUN
28 Nov 11am b
Nov 28th 12.00…

Nov 28th 1pm…
28 Nov 1300
Nov 28th 2pm… by now the Sun will be very low in the sky, making the comet very hard to find… but we will still try, won’t we? :-)
28 Nov 1400 

Thanks BY  http://waitingforison.wordpress.com

 

அம்பானிகளும் ,டாடாக்களும் ஆய்வுக்கு நிதி கொடுக்க வேண்டும் :- பேராசிரியர் ராவ்


பெங்களூரு பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய ராவ் கூறியதாவது: இந்தியாவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அறிவியலுக்கு 0.9 சதவீதம் தான் அரசு ஒதுக்கி செலவிடுகிறது.மேலும் அதற்கு ஆகும் செலவுக்கு மீணடும் அரசே பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதாவது தொழில்துறையிலிருந்து பங்களிப்பு கிடையாது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எதிர்மறையாகவே உள்ளது.அதாவது அமெரிக்க மற்றும் ஜப்பான் எடுத்துக்கொண்டால் 50 சதவீதத்திற்கும் மேலாக தொழில்துறையிலிருந்து பணமாக கிடைக்கிறது.
பெங்களூரு: இந்தியாவில் அறவியல் கண்டுபிடிப்பு ஆய்வுகளுக்கு அம்பானிகளும், டாடாக்களும் நிதி கொடுக்க வேண்டும் என்றும் தனியார் துறையின் ஆதரவு பெரிய அளவில் தேவை என விஞ்ஞானி மற்றும் பாரத ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பேராசிரியர் ராவ் ராவ் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை பங்களிப்பு தேவை:
அம்பானிகளும் டாடாக்களும் அறிவியல் நன்மைகளை நிறைய பெற்றிருப்பர்.அதனால் அவர்கள் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார் ராவ். அரசு பணம் ஒதுக்கீடு செய்வது 2 சதவீதம் உயர்த்துவதாக உறுதி கூறியிருக்கிறது. பார்ப்போம் இது நான்கு அல்லது 5 ஆண்டுகளில் நடக்கும் என நம்புகிறேன்.மேலும் நிறுவனங்களை உருவாக்கும் கல்வி முறையை மேம்படுத்த அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.கல்வியை மேம்படுத்துவது என்பது அதன் தரத்தில் உள்ளது. அதாவது சமூகத்தின் போக்கு மாற வேண்டும், மேம்படுத்த வேண்டும்.
குழந்தைகளை பி.எஸ்.சி., மட்டுமே படிப்பு என அதில் தள்ளிவிடக்கூடாது.தனி அறிவு திறன் மட்டும் போதாது. பல்துறை அறிவு திறன் முக்கியமானது.15 ஆண்டுகளாக நான் இங்கிருந்து பார்க்கும் போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவிலிருந்து வருபவர்கள் ஐ.டி., வங்கி, வர்த்தகம் மற்றும் மற்ற வேலைவாய்ப்புகளுக்கு தான் வருகிறார்கள். நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் அல்ல. மற்ற துறைகளும் திறமையானவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பெங்களூரு தகவல்தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்றது என அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதை நாம் அறிவியல் நகராக பார்க்க துவங்க வேண்டும் என்றார் ராவ்.  நன்றி -தினமலர்  , 24.11.2013
Click Here

விஞ்ஞானி திரு C.N.R ராவ் & திரு .ஜெயபால் ரெட்டி MP -கருத்துக்கள்


ஐசான் வால் நட்சத்திர அறிவியல் விழிப்புணர்வு பிரசாரம் 22.11.2013


பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம், நவம்பர் 5–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்படும்

முதல்முறையாக.... ‘முதல்முறையாக இந்தியா வேற்று கிரகத்துக்கு அதாவது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது. இது இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் ஆகும்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலக் அனுப்பும் செயல்திட்டத்திற்கான தன்னுடைய கவுண்டவுனை ஆரம்பிக்கவுள்ளது இந்தியா.
எதிர்வரும் நவ.5ம் திகதி செவ்வாய் ஆர்பிட்டர் திட்டம் (Mars Orbiter Mission) தொடங்கப்படவுள்ளது. 9 மாதங்கள் தனது பயணத்தை மேற்கொண்டு எதிர்வரும் 2014 செப்டெம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தின் ஆர்பிட்டருக்குள் செல்லவுள்ளது இந்திய விண்வெளி ஓடம்.

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளை அறியும் ஆராய்ச்சிக்காக இந்தியா தன்னிச்சையாக அனுப்பும் முதல் விண்லகலத் திட்டம் இதுவாகும். ஆனால் இவையெல்லாவற்றுக்கும் முதல், குறித்த விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தை சென்றடைவதை உறுதிப்படுத்தவே 85% வீதமான எமது உழைப்பு இருந்துள்ளது என்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன்.

கடந்த 18 மாதங்களாக இஸ்ரோ மேற்கொண்டு வந்த இச்செயற்திட்டத்திற்காக சுமார் ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஐந்து  வகையான பாகங்கள் இவ்விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு 260 பாகையில் பனோராமா வகையில் படப்பிடிப்பை மேற்கொண்டு பூமிக்கு அனுப்பவுள்ளதுடன், செவ்வாயில் நீர்க்கூறுகள் இருக்கின்றனவா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளன.

மூன்றாவது பாகம், என்னவகையான வளிமண்டலம் அங்கு காணப்படுகிறது என ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளது. நான்காவது பாகமே மிக முக்கியமானது. என்னவகையான உயிர்வாழ்க்கை செவ்வாயில் நிலவுகிறது. அல்லது சாத்தியமானது என இது ஆராயவுள்ளது.  உலகின் ஐந்தே ஐந்து விண்வெளி மையங்களே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ளும் திறன் படைத்துள்ளன. இவற்றில் 45%வீதமான திட்டங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. சில செவ்வாய்க்கிரகத்திற்கு சென்றடைவதற்குள்ளேயே தோல்வியில் முடிவடைந்துள்ளன. எனவே இந்தியாவின் இம்முயற்சி  தற்போது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த வாரம் இந்தியா ராக்கெட் அனுப்பும் போது, வெறுமனே அதுவொரு விண்கலத்தை மட்டும் சுமந்து செல்லவில்லை. செவ்வாயில் உயிர்வாழ்க்கை சாத்தியமானதா எனும் சாதாரண, அடிப்படைக் கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் கனவுகளையும் சுமந்து செல்லவுள்ளது என்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன்.